Kathir News
Begin typing your search above and press return to search.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை டெல்லி மருத்துவமனையில் திடீர் மரணம்.!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை டெல்லி மருத்துவமனையில் திடீர் மரணம்.!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை டெல்லி மருத்துவமனையில் திடீர் மரணம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2020 7:15 AM GMT

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த். சொந்த கிராமத்தில் உள்ள சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டும் மற்றும் சில மாடுகள் வைத்து பால் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த் சிங் பிஷ்த், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதை அடுத்து மார்ச் 15ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News