Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டின் சிறந்த திட்டமாக விருதை தட்டிச்சென்ற வந்தே பாரத் ரயில் திட்டம்

நாட்டின் சிறந்த திட்டமாக வந்தே பாரத் ரயில் திட்டம் விருதை வாங்கியுள்ளது.

நாட்டின் சிறந்த திட்டமாக விருதை தட்டிச்சென்ற வந்தே பாரத் ரயில் திட்டம்

KarthigaBy : Karthiga

  |  23 Aug 2023 4:30 PM GMT

உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எப் விளங்குகிறது . இங்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன . இந்த நிலையில் விரைவு பயணத்தை அடிப்படையாகக் கொண்டு வந்தே பாரத் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது . அந்த வகையில் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2018 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.


இந்த ரயிலின் சேவை டெல்லி- வாரணாசியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கியது. தற்போது வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம்- காதர் கோடு இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. தயாரிப்பை அதிகப்படுத்த ரயில்வே வாரிய முடிவு செய்துள்ளது. அதன்படி 2023 - 24ம் நிதி ஆண்டில் சென்னை ஐ.சி. எஃப் இல் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இந்திய திட்ட மேலாண்மை நிறுவனத்திடம் இருந்து சென்னை ஐ.சி.எப் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டப் பிரிவில் வந்தே பாரத் ரயில் திட்டத்திற்கு 2023 - ஆம் ஆண்டின் நாட்டின் சிறந்த திட்டத்திற்கான விருதினை பெற்றுள்ளது .இணையதளம் மூலம் நடைபெற்ற இந்த விழாவில் நிதி ஆயோக் நிறுவன இயக்குனர் விஜயகுமாரிடமிருந்து ஐ.சி.எப். பொது மேலாளர் பி ஜி மல்லையா விருதை பெற்றுக் கொண்டார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News