Kathir News
Begin typing your search above and press return to search.

"மெசேஜ் மட்டும் திட்டி பத்தாயிரம் வருது, விட்ருங்கப்பா என்னை" என கெஞ்சி சுப.வீ வரிசையில் இணைந்த வேலு பிரபாகரன்.! #Veluprabhakaran #DiravidarKazlagam #KarupparKootam

"மெசேஜ் மட்டும் திட்டி பத்தாயிரம் வருது, விட்ருங்கப்பா என்னை" என கெஞ்சி சுப.வீ வரிசையில் இணைந்த வேலு பிரபாகரன்.! #Veluprabhakaran #DiravidarKazlagam #KarupparKootam

மெசேஜ் மட்டும் திட்டி பத்தாயிரம் வருது, விட்ருங்கப்பா என்னை என கெஞ்சி சுப.வீ வரிசையில் இணைந்த வேலு பிரபாகரன்.! #Veluprabhakaran #DiravidarKazlagam #KarupparKootam

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 July 2020 2:04 PM GMT

திராவிடர் கழகத்து ஆதரவாளர்கள் ஏதாவது வாய்க்கு வந்த கருத்தை பகுத்தறிவு என்கிற பெயரில் உளறிவிட்டு பின்பு எதிர்ப்புகள் கிளம்பியவுடன் ஐய்யோ மன்னிச்சு என கீழே விழுவது சகஜமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக இவர்கள் வாயில் இந்து மதத்தை விமர்சிக்கும் வார்த்தைகள் மட்டுமே வரும் தப்பி தவறி கூட மற்ற மதங்களை விமர்சித்தும் விட மாட்டார்கள்.

தற்பொழுது அந்த வரிசையில் இயக்குனர் வேலு பிரபாகரன் இணைந்திருக்கிறார். இவர் சென்ற வாரத்தின் இறுதியில் சேனல் விஷன் என்கிற யூ ட்யூப் சேனலுக்கு மதன் ரவிச்சந்திரன் முன்னிலையில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் பிரபலமாக பரவியது. அதில் இவரின் வார்த்தைகள் இந்துமதத்தை விமர்சித்தே அமைந்தன இதனால் கோபம் கொண்ட இந்து மத ஆர்வலர்கள் இவரின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவரை சராமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

அதை இவர் இன்று வீடியோ பதிவின் மூலம் வெளியிட்டு மன்னிப்பு கோரி உள்ளார். குறிப்பாக குறுச்செய்திகள் மட்டுமே 10000 வந்துள்ளதாகவும், தான் தெரிந்தோ, தெரியாமலோ ஏதும் கூறி விட்டால் என்னை மன்னித்தருள்க என கெஞ்சலுடன் பதிவேற்றியுள்ளார்.

சுப.வீரபாண்டியன் சமீபத்தில் இதுபோல் இன்னலுக்கு ஆளாகி மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடதக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News