Kathir News
Begin typing your search above and press return to search.

'துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு மற்றும் வர்த்தக கண்காட்சி' - பிரதமர் மோடி தலைமையில் தொடக்கம்!

குஜராத்தில் உலக வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு மற்றும் வர்த்தக கண்காட்சி - பிரதமர் மோடி தலைமையில் தொடக்கம்!

KarthigaBy : Karthiga

  |  10 Jan 2024 5:45 AM GMT

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் 'துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு' என்ற மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறிர். இதற்காக நேற்று முன் தினம் இரவு குஜராத் சென்றடைந்த .அவர் மாநாட்டுக்கு வந்துள்ள உலக தலைவர்களையும் சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் நேற்று சந்தித்து பேசினார் .அதனை தொடர்ந்து மாநாட்டின் ஒரு பகுதியாக துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சி என்ற கண்காட்சியை தொடங்கி வைத்தார்.


இந்த விழாவில் குஜராத் முதல் மந்திரி பூபேந்திர ப.படேல், குஜராத் பா.ஜனதா தலைவர் சி.ஆர் பாட்டீல் மற்றும் கவர்னர் ஆச்சார்ய தேவ்ரத் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களின் முன்னிலையில் நினைவு நாணயம் மற்றும் முத்திரையை பிரதமர் மோடி வெளியிட்டார். காந்தி நகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் சுமார் 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ள இந்த வர்த்தக கண்காட்சி இன்றும் நாளையும் வணிக பார்வையாளர்களுக்காகவும் அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்காகவும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மொசாம்பிக் அதிபர் பிலிப் நியூசியுடன் இணைந்து துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியை பார்வையிட்டார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News