Kathir News
Begin typing your search above and press return to search.

இறைவனிடம் முறையிடும் போராட்டம் ! விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் என இந்துமுன்னணி உறுதி !

இறைவனிடம் முறையிடும் போராட்டம் நெல்லைய்ப்பர் சுவாமி கோவிலில் நடைபெற்றிருந்தது.

இறைவனிடம் முறையிடும் போராட்டம் ! விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் என இந்துமுன்னணி உறுதி !
X

TamilVani BBy : TamilVani B

  |  3 Sept 2021 12:00 PM IST

விநாயகர் சதுர்த்தி தடைக்கு எதிராக இறைவனிடம் முறையிடும் போராட்டத்தில் ஈடுப்பட்டது இந்துமுன்னணி.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையிலும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதற்கு இந்து முன்னனி மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திருநெல்வேலி இந்து முன்னணி அமைப்பு சார்ப்பில் இறைவனிடம் முறையிடும் போராட்டம் நெல்லைய்ப்பர் சுவாமி கோவிலில் நடைபெற்றிருந்தது. இந்த போராட்டதிற்கு இந்துமுன்னணியின் மாநில பொது செயலாளர் குற்றாலநாதன் தலைமை வகித்தார்.

விநாயகர் நாமம் சொல்லி பிராத்தனை செய்யும் போராட்டதில் ஈடுப்பட்டதோடு நெல்லையப்பர் முன்பு கோரிக்கை மனுவை வைத்து முறையிடும் போராட்டதில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து பேசிய குற்றாலநாதன் எத்தனை தடைகள் வந்தாலும் நாளை காப்பு கட்டுதல் நிகழச்சியுடன் தொடங்கும் என தெரிவித்தார்.

ஏற்கனவே இந்துமுன்னணி தலைவர் திரு. அர்ஜீன்சம்பத் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதில் உறுதியாக இருப்பது குறிப்பிடதக்கது.

Source: The Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News