Kathir News
Begin typing your search above and press return to search.

உள்நாட்டு பாதுகாப்பு திறன்களின் எதிர்காலத்தை வலுப்படுத்த 'விந்தியகிரி'

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'விந்தியகிரி' போர்க்கப்பல் ஜனாதிபதி முர்மு 17-ஆம் தேதி கடற்படைக்கு அர்ப்பணிக்கிறார்.

உள்நாட்டு பாதுகாப்பு திறன்களின் எதிர்காலத்தை வலுப்படுத்த விந்தியகிரி

KarthigaBy : Karthiga

  |  15 Aug 2023 3:00 PM GMT

இந்திய கடற்படையில் நீலகிரி, உதயகிரி, துனகிரி, தாரகிரி என்று பெயரிடப்பட்ட ஐந்து போர்க்கப்பல்கள் உள்ளன. ஆறாவதாக விந்தியகிரி என்ற பெயரில் ஆன போர்க்கப்பல் கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 17ஆம் தேதி இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் 'புராஜெக்ட் 17 ஏ' என்ற திட்டத்தின் கீழ் மும்பையை தளமாக கொண்ட எம்.டி. எல் நிறுவனத்தில் நான்கு கப்பல்களும் கொல்கத்தா ஜி.ஆர் எஸ்.இ நிறுவனத்தில் மூன்று கப்பல்களும் கட்டுமானத்தில் உள்ளன.


முதல் ஐந்து கப்பல்கள் 2019- 2022 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன.இந்த போர்க்கப்பல்களில் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் மற்றும் பிளாட்பார்ம், மேனேஜ்மென்ட் சிஸ்டம்கள் உள்ளன என்று கடற்கரை அதிகாரிகள் தெரிவித்தனர். விந்தியகிரி போர்க்கப்பல் உள்நாட்டு பாதுகாப்பு திறன்கள் எதிர்காலத்தை வலுப்படுத்தும். அதே வேளையில் அதன் பலமான கடற்படை பாரம்பரியத்துக்கான இந்தியாவின் உறுதிபாட்டின் அடையாளமாக உள்ளது. என்று கடற்படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE:DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News