1.40 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா- அமெரிக்கா சாதனை!
1.40 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது.
By : Karthiga
இந்தியா அமெரிக்கா இடையிலான நட்புறவு சமீபத்திய ஆண்டுகளில் வலுப்பெற்று வருகிறது. இருதரப்பம் பல்வேறு துறைகளில் தங்களின் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக இந்திய அமெரிக்க மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்திய அமெரிக்க மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு இந்திய மாணவர்கள் 1.40 லட்சம் பேருக்கு விசாக்களை வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் விசா சேவைகளுக்கான துணைச் செயலாளர் ஜூலி ஸ்டபட் கூறியதாவது:- இந்த ஆண்டு இந்தியாவில் நாங்கள் செய்ததை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் 10 லட்சம் விசாக்களை வழங்க இலக்கு நிர்ணயித்தோம். நாங்கள் அதை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் பல மாதங்களுக்கு முன்பாகவே அதை செய்து முடித்தோம். எனவே எண்ணிக்கை அதிகம் தாண்டி செல்லும். குறிப்பாக இந்திய மாணவர்கள் அமெரிக்கா வருவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
கடந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் விசாக்களை வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது. விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் அவர்கள் நேர்காணல் செய்யப்படுவதை உறுதி செய்ய இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் வாரத்தில் ஆறு முதல் ஏழு நாட்கள் வரை வேலை செய்கின்றன. இந்தியாவில் விசா நியமனம் காத்திருப்பு நேரத்தை குறைக்க அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . இது இன்னும் சற்று அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI