Begin typing your search above and press return to search.
குடும்பத்துடன் கும்பமேளாவில் பங்குபெற்ற கிரிக்கெட் வீரர்
குடும்பத்துடன் கும்பமேளாவில் பங்குபெற்ற கிரிக்கெட் வீரர்
By : Kathir Webdesk
இந்திய கிரிக்கெட் வீரரான வி.வி.எஸ். லக்ஷ்மன், தனது குடும்பத்தினருடன் ப்ராயக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பங்கு பெற்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், ப்ராயக்ராஜில் பாயும் புனித கங்கையில், கும்பமேளாவில் பங்குபெற்ற வி.வி.எஸ் லக்ஷ்மன், தனது குடும்பத்தினருடன் கங்கையில் புனித நீராடினார். அதன் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த வி.வி.எஸ் லக்ஷ்மன் "ஹர் ஹர் கங்கே", என்று கங்கை மாதாவை வணங்கியுள்ளார்.
முன்னதாக பாரத பிரதமர் மோடி அவர்கள், கும்பமேளாவில் பங்குபெற்று, கங்கையில் புனித நீராடி கங்கையை வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story