Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களின் நல்வாழ்வுக்காக அயராது உழைப்போம்- பிரதமர் மோடி!

பா.ஜனதா வெற்றியை பரிசளித்த மக்களின் நல்வாழ்வுக்காக அயராது உழைப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களின் நல்வாழ்வுக்காக அயராது உழைப்போம்-  பிரதமர் மோடி!

KarthigaBy : Karthiga

  |  4 Dec 2023 12:38 PM GMT

மத்தியபிரதேசம் , சத்தீஸ்கர் , ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் தெலுங்கானாவை தவிர மீதமுள்ள மூன்று மாநிலங்களையும் பா.ஜனதா கைப்பற்றி உள்ளது. இந்த மகத்தான வெற்றியை நாடு முழுவதும் பா. ஜனதாவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த பிரம்மாண்ட வெற்றிக்காக கட்சியினரை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது :-


மகளின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கிடைத்துள்ள வெற்றியானது பா. ஜனதாவின் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மக்கள் உறுதியாக இருப்பதை காட்டுகிறது. பா.ஜனதா என்றால் நல்லாட்சியும் வளர்ச்சியும்தான். இந்த மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு வெற்றியை பரிசளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் அயராது உழைப்போம் என்பதை உறுதி அளிக்கிறோம்.


கட்சியின் தொண்டர்களுக்கு சிறப்பு நன்றிகள். அவர்கள் ஒவ்வொருவரும் சிறப்பு வாய்ந்தவர்கள். அவர்கள் அயராது உழைத்து நமது வளர்ச்சி நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைத்துள்ளனர். தெலுங்கானாவில் உள்ள அன்புமிக்க சகோதர சகோதரிகளே பா.ஜனதாவுக்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி மாநில மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News