Kathir News
Begin typing your search above and press return to search.

இருமல் அதிகமாக இருக்கும் பொழுது இதைச் சாப்பிட வேண்டும் ?

What to eat in cold and cough.

இருமல் அதிகமாக இருக்கும் பொழுது இதைச் சாப்பிட வேண்டும் ?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Nov 2021 12:30 AM GMT

சளி மற்றும் இருமல் பிரச்சினை பொதுவானதாகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுகின்றது. குளிர் காலத்தில் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். அந்த நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும்? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாறிவரும் வானிலை காரணமாக பெரும்பாலும் மக்களுக்கு இருமல் மற்றும் சளி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனினும், சில வீட்டு வைத்தியங்கள் இருமல் மற்றும் சளியை குணப்படுத்துகிறது. உணவு குழாய் மீது தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகளால் தொண்டைக்கு அருகிலுள்ள பகுதி பாதிக்கப்படுகிறது. தொற்று காரணமாக, ஒரு நபர் தனது தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதாக உணர்கிறார். இதன் காரணமாக, தொண்டை வலி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அதனால்தான் மக்கள் தொண்டையில் இருந்து சளியை அகற்ற இரும்ப தொடங்குகிறார்கள்.


அதிகப்படியான இருமல் ஏற்பட்டால் ரத்தத்தில் சில துளிகள் சளியுடன் வெளியேறுகிறது. சிலர் இதனை ஒரு பொதுவான பிரச்சினையாகவே கருதுகின்றனர். எனினும் சிலருக்கு, இருமல் மற்றும் சளியின் போது எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாதலே இருமல் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இருமலைக் குணப்படுத்த, மருத்துவர்கள் பல மருந்துகளைக் பரிந்துரைக்கின்றனர், இதனால் இருமலைக் குணப்படுத்த இயலும். எனினும், அவர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். பலருக்கு சளி மற்றும் இருமலில் என்ன சாப்பிட வேண்டும் என்று தெரியாது.


வெல்லத்தின் நுகர்வு, இருமலின் போது நன்மை பயக்கிறது. இருமல் பிரச்சினை உள்ள சமயங்களில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் உட்கொள்ள வேண்டும். வெல்லத்துடன் இஞ்சியை தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. வைட்டமின் C பழத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் இருமல் பிரச்சினை குணமாகிறது. எனவே, நீங்கள் தக்காளி, பப்பாளி, கொய்யா ஆகியவற்றை சாப்பிட வேண்டும். இஞ்சி தேநீர் குடிப்பது இருமலுக்கு நன்மை பயக்கிறது. இஞ்சி தேநீர் தொண்டை கபத்தை நீக்குகிறது. கூடுதலாக, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இஞ்சியில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, அவை சுவாச மண்டலத்திலுள்ள தொற்றுநோயை அகற்ற உதவுகின்றன. பூண்டு இருமலைத் தடுக்க உதவுகிறது. இருமல் பிரச்சினையைத் தடுக்க பூண்டு உட்கொள்ள வேண்டும். உடலின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த பூண்டு உதவுகிறது. நீங்கள் பூண்டு மொட்டை சாப்பிட முடியாவிட்டால், அதை உணவில் கலந்து சாப்பிடலாம்.

Input & Image courtesy:Logintohealth


Next Story
கதிர் தொகுப்பு
Trending News