Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜக மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் போது இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாறுவது உறுதி- பிரதமர் மோடி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடியின் சூறாவளி பிரச்சாரம் குறித்து காண்போம்.

பாஜக மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் போது இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாறுவது உறுதி- பிரதமர் மோடி!

KarthigaBy : Karthiga

  |  3 April 2024 10:23 AM GMT

ஊழல் வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங் நகர் மாவட்டம் ருத்ராபூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது :-

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் செய்யப்பட்ட பணிகளை விட பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. ஊழல் செய்பவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள் .ஆனால் அவர்களால் என்னைத் தடுக்க முடியாது. ஊழல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் எதிரான நடவடிக்கை தொடரும். நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் என் கரத்தை வலுப்படுத்துங்கள். பா ஜனதா மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் போது இந்தியாவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதற்கு உத்திரவாதம் அளிக்கிறேன். மோடியின் உத்தரவாதம் என்பது உத்தரவாதத்தை நிறைவேற்றுவதாகும். எண்ணங்கள் சரியாக இருக்கும் போது வளர்ச்சி ஏற்படும். சரியான நோக்கங்கள் நல்ல முடிவுகளுக்கு வழி வகுக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News