பிரதமரின் விவசாய நிதி உதவி 11'வது தவணைத்தொகை 2000 ரூபாய் எப்போது வழங்கப்படும் - வெளியான சூப்பர் தகவல்
பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 11'வது தவணைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
By : Mohan Raj
பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 11'வது தவணைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 11'வது தவணை தொகை இன்னும் சில நாட்களில் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது பணம் எப்பொழுது செலுத்தப்படும் என மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும் அரசு வட்டாரங்களில் கூறப்படும் தகவலின்படி மே 14ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக பணம் செலுத்தப்படும் என தெரிகிறது.
நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு பிரதமரின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தில் பயனடைய கூடியது விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் பணம் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது, ஒவ்வொரு தவணையிலும் ரூ.2000 ரூபாய் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரதமர் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 10-வது தவணைத் தொகை கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது தற்பொழுது 11'வது நிலுவை தொகைக்கு விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
11'வது விவசாய உதவி தொகையானது வரும் மே மாதம் 14ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாகவே விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.