Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜீவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை அளித்தது பற்றி பேசாதது ஏன்? ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி கேள்வி!

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை அளித்தது பற்றி ராகுல் காந்தி பேச மறுப்பது ஏன் என்று மதிய மந்திரி அனுராக் தாக்குர் கேள்வி விடுத்துள்ளார்.

ராஜீவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை அளித்தது பற்றி பேசாதது ஏன்? ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி கேள்வி!

KarthigaBy : Karthiga

  |  28 Feb 2023 1:15 AM GMT

மத்திய மந்திரி அனுராக் தாக்குர் ஹைதராபாத் சென்றார், ஹைதராபாத் அருகே கட்டப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார் .அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அனுராக் தாக்குர் கூறியதாவது:-


ராகுல் காந்தி எப்போதும் சீனாவை பற்றி பேசுகிறார். ஆனால் அவரது குடும்பத்திற்கு சொந்தமான ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனா அளித்த நன்கொடை பற்றி அவர் எதுவும் பேசுவதில்லை . அந்த நன்கொடை பற்றி கேட்ட கேள்விக்கு அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. சீனா நமது எல்லை பகுதியை ஆக்கிரமிக்க முயன்ற போது அவர் சீன அதிகாரிகளுடன் என்ன செய்து கொண்டு இருந்தார்? என்பதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. சீன ஆக்கிரமிப்புக்கு நமது பாதுகாப்பு படைகள் உரிய பதிலடி கொடுக்கும்போது நமது படைகளை ராகுல் காந்தி இழிவு படுத்துகிறார்.


இந்திய படைகள் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து ராகுல் காந்தியும் அவருடைய கட்சியினரும் சந்தேகம் எழுப்புகிறார்கள். படையினரின் மன உறுதியை சீர்குலைக்க பார்க்கிறார்கள். இந்திய பணிகளை இழிவாக காட்டும் போக்கை காங்கிரஸ் இன்னும் கைவிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News