ராகுல் காந்தி மீது இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு போடுவேன் - லலித் மோடி மிரட்டல்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பெருமளவு நிதி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து நாட்டை விட்டு தப்பி ஓடி 2010முதல் இங்கிலாந்தில் வசித்து வருபவர் லலித் மோடி.
By : Karthiga
2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய போது" லலித் மோடி நிரவ் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களும் பெயருக்கு பின்னால் மோடி என்ற பின் பெயரை பெற்றிருப்பது எப்படி?" என்ன பேசியதாக சர்ச்சை எழுந்தது இது குறித்த வழக்கில் சம்பவம் நடந்த நான்காண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மிரட்டல் விடுத்து லலித் மோடி டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
நான் கிட்டத்தட்ட நூறு பில்லியன் டாலர் வருமானத்தை உருவாக்கியுள்ள விளையாட்டுப் போட்டியை தோற்றுவித்தவன் . ராகுல் காந்தி குடும்பத்தை விட எனது குடும்பம் இந்த நாட்டுக்காக நிறைய செய்திருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி கூட்டாளிகள் நான் நீதிக்கு பயந்து தப்பி ஓடிவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். நான் இதுவரை எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை .எனவே நான் ராகுல் காந்தியை இங்கிலாந்து கோர்ட்டுக்கு இழுக்க முடிவு செய்துள்ளேன் .அவர் உறுதியான ஆதாரங்களுடன் வருவார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.