மந்திரிகளுடன் இணைந்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கண்டு ரசித்த யோகி ஆதித்யநாத் - பட குழுவினருக்கு பாராட்டு
மாநில மந்திரிகளுடன் இணைந்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை யோகி ஆதித்யநாத் பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு பட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
By : Karthiga
சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது . இந்த திரைப்படத்தை மேற்கு வங்காளத்தில் திரையிட மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று இந்த திரைப்படத்தை பார்த்தார் . அவருக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா, மாநில பா.ஜனதா தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி மற்றும் மாநில மந்திரிகளும் யோகி ஆதித்யநாத்துடன் இந்த திரைப்படத்தை பார்த்தனர். அத்துடன் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் இந்த திரைப்படத்தை பார்த்தனர் .
இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரைப்படத்தை பார்த்தபின் யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் தளத்தில், 'எனது மந்திரி சபை சகாக்களுடன் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தேன். இந்த திரைப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார்.