Kathir News
Begin typing your search above and press return to search.

முலாயம் சிங் யாதவ் கூறியதை அவரது மகன் அகிலேஷ் ஏற்றுக் கொள்ள வேண்டும் - உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்!

முலாயம் சிங் யாதவ் கூறியதை அவரது மகன் அகிலேஷ் ஏற்றுக் கொள்ள வேண்டும் - உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்!

முலாயம் சிங் யாதவ் கூறியதை அவரது மகன் அகிலேஷ் ஏற்றுக் கொள்ள வேண்டும் - உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Feb 2019 9:34 AM GMT


மக்களவையில் நேற்று முலாயம் சிங் யாதவ் பேசும்போது, "அனைத்து மக்களையும் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் பயணத்தை முன்னெடுத்த பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறேன். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்புகிறேன்" என்றார். அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் மற்றும் கூட்டணியினர், தொண்டர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.


உத்தரப் பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுதொடர்பாக கூறுகையில், "நாடாளுமன்றத்தில் முலாயம் சிங் யாதவ் என்ன பேசினாரோ, அது தான் உண்மை. எப்போதுமே உண்மை வெற்றி பெறும். முலாயம் சிங் யாதவைப் போலவே, அவரது மகன் அகிலேஷ் யாதவும் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்" என்றார் யோகி. உத்தரப் பிரதேச மாநிலத்தில், தேர்தலையொட்டி மாயாவதி கட்சியுடன், அகிலேஷ் யாதவ் கூட்டணி வைத்துள்ள நிலையில், முலாயம் சிங்கின் கருத்தால் அவருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News