யூடியூப் விபரீதம் : பெட்ரோல் குண்டு தயாரித்து வெடிக்க வைத்த வீடியோவை பதிவிட்ட சிறுவர்கள் கைது
வள்ளியூரில் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து வெடிக்க வைத்த சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
By : Karthiga
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் ஒரு வீடியோ பரவியது. அதில் மூன்று பேர் ஒரு பழைய கட்டிட சுவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்ப்பது போல் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க மூன்று பேரும் நடனமாடிய காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. அவர்கள் யார் என்பது குறித்து பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட மூணு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் வள்ளியூர் கீழத்தெருவைச் சேர்ந்த இசக்கியப்பன் மற்றும் 17 , 19 வயதுடைய சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் 16 வயதுடைய சிறுவனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவன் தப்பி சென்று விட்டதால் போலீசார் தேடி வருகிறார்கள்.
பிடிபட்ட மூன்று பேரும் யூடியூப் பார்த்து பெட்ரோல் பண்டுகளை தயாரித்துள்ளனர். அவர்கள் தயாரித்த குண்டுகளை ஒரு கட்டிடத்தின் சுவர் மீது வீசி ஒத்துகை பார்த்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வெளியிட்டபோது சிக்கிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து இசக்கியப்பன் மற்றும் இரண்டு சிறுவர்களை கைது செய்தார்.
இரண்டு சிறுவர்களும் நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அதில் வேறு ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? எதற்காக பெட்ரோல் குண்டு தயாரித்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிக்க வைத்த சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
SOURCE :DAILY THANHI