Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியர்கள் அளப்பரிய சேவை உணர்வு காரணமாக சவுதியில் நடைபெற்ற 115 வது இரத்ததான முகாம்!

இந்தியர்கள் அளப்பரிய சேவை உணர்வு காரணமாக சவுதியில் நடைபெற்ற 115 வது இரத்ததான முகாம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 July 2021 12:41 PM GMT

தற்போது உள்ள அசாதாரணமான இந்த கொரோனா நோய்த்தொற்று காலத்தில் கூட, பிறர் நலம் காக்கும் நோக்கத்தில் இங்கே பணி செய்யும் இந்தியர்கள் தங்களின் அளப்பரிய இரத்ததான சேவையை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து, உதவும் வகையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இது சுமார் 115-வது மாபெரும் இரத்ததான முகாம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இந்த முகாமில் 84 இந்தியர்கள் நன்கொடையாளர்கள் என்று பதிவு செய்து இரத்ததானம் செய்தனர்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் அஹமது முக்தார் அவர்கள் கூறுகையில், "இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்கள். பிறர் நலம் காப்பதற்காக தன்னுடைய ரத்தத்தை தானமாக தரும் இந்த தானம் மிகவும் சிறந்தது" என்று அவர் கூறினார். மேலும்‌ இம்முகாம் குறித்து பேசிய ரியாத் மண்டல தலைவர் செய்யது இப்ராஹீம், "கடந்த ஒன்றரை வருட காலமாக அசாதாரண சூழ்நிலையும் நெருக்கடியும் தொடர்ந்து இருந்து வரும் காலகட்டத்தில் பிறர் நலன் மற்றும் ஹஜ் பயணிகளின் தேவைகளுக்காக இந்த மனிதநேய உதவியை நீங்கள் செய்து உள்ளீர்கள். பல தன்னார்வ உதவியாளர்களும் தாங்கள் முன்வந்து இந்த உதவி செய்வதற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.


மேலும் இந்த உயிர் காக்கும் மகத்துவமான பணி என்றும், இதுபோன்ற நற்பணிகள் இந்திய தேசத்தின் சகோதரத்துவத்தையும், அன்பையும் போற்றும் விதத்தில் அமைந்தது. மேலும் நம் இந்தியர்களின் தியாகங்ககளையும், தேசப்பற்றையும் பிறநாடுகளில் பறைசாற்றும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாபெரும் இரத்ததான முகாம் மனிதநேயத்தை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தங்களின் தியாகத்தாலும் வெளிப்படுத்தியிருந்தது மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News