Kathir News
Begin typing your search above and press return to search.

ஃப்ரீ ஃபயர் நிறுவனர் இந்தியாவுடன் கலந்துரையாடல்: மத்திய அரசின் திட்டவட்ட முடிவு இதுதான்!

இந்தியாவின் $16 பில்லியன் நஷ்டத்திற்கு பிறகு, சிங்கப்பூர் நிறுவனம் மேற்கொள்ளும் புதிய முயற்சி.

ஃப்ரீ ஃபயர் நிறுவனர் இந்தியாவுடன் கலந்துரையாடல்: மத்திய அரசின் திட்டவட்ட முடிவு இதுதான்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 March 2022 3:50 PM GMT

சீ குரூப் என்பது சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனமாகும். இது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்த விரும்புகிறது. ஆனால் சில சீன பயன்பாடுகளை தடை செய்வதோடு, இந்தியாவில் மோடி அவர்கள் அரசாங்கம் "ஃப்ரீ ஃபயர்" கேமிங் அப்ளிகேஷனையும் இந்தியாவில் தடை செய்தது இதன் காரணமாக இந்த நிறுவனம் சுமார் 16 பில்லியன் நஷ்டத்தையும் ஒரே நாளில் சந்தித்தது. சீயின் நியூயார்க் பங்கு ஒரே இரவில் 18% க்கும் அதிகமாக சரிந்தது.


"ஃப்ரீ ஃபயர்" மீதான இந்தியாவின் தடைக்குப் பிறகு, சீயின் இணை நிறுவனர் கேங் யே இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவின் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவை அவர் சந்தித்ததாக அறிக்கை காட்டுகிறது. ஃப்ரீ ஃபயர் மீதான இந்தியாவின் தடை திரும்பப் பெறப்படாது என்று இந்திய அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. சீனாவுடன் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த நிறுவனம் தவிர்க்கும் வகையில் செய்தால் இந்தியாவில் அதன் மற்ற பயன்பாடுகளை தொடர்ந்த அனுமதிக்கும் என்பதே இந்தியாவின் திட்டவட்ட முடிவு.


உதாரணமாக, சீயின் இ-காமர்ஸ் வணிகப் பிரிவான Shopee இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. "ஃப்ரீ ஃபயர்" மீதான இந்தியாவின் தடை, வெற்றிப் பட்டியலில் அடுத்த இலக்கு சீயின் ஈ-காமர்ஸ் வணிகமாக இருக்கலாம் என்ற அச்சத்தைத் தூண்டியது. சிங்கப்பூர் நிறுவனத்திற்கான இந்தியாவின் செய்தி தெளிவாக இருக்கிறது. இந்தியாவில் வணிகம் செய்வதற்கு சீனாவுடனான வணிக உறவுகளைத் தவிர்ப்பது கட்டாயமாகும்.

Input & Image courtesy:TFI Globalnews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News