Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியாவில் உள்ள தீவை சீனாவிற்கு விற்க முடிவு - காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருக்கும் ஒரு தீவை சீனாவிற்கு விற்க முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள தீவை சீனாவிற்கு விற்க முடிவு - காரணம் என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Aug 2022 2:45 AM GMT

ஆஸ்திரேலியாவில் சுற்றி கடல் பகுதியில் பல தீவுகள் உள்ளன. இத்தகைய தீவு நாடுகளை யார் வாங்கும் நினைக்கிறார்களோ? அவர்களுக்கு அதிக விலையில் விற்று வருகிறது அந்நாட்டு அரசாங்கம். அந்த வகையில் தற்போது அவற்றின் சில தீவுகளை சிலர் வாங்கி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இந்நிலையில் கான் பிலிப்ஸ் எனப்படும் தீவுக் கூட்டங்களை சீனாவிற்கு விற்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானி செய்தியாளர்களிடம் பேசும்போது, கான்ஃபிலிக்ஸ் தீவுகளை வாங்கு வாங்காமலேயே சீனா நிறைய விஷயங்களை எதிர்த்து கொண்டு வந்திருக்கின்றது.


அந்த தீவுகளை சீனா வாங்காமல் இருப்பதற்கான எந்த முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை அவற்றை நாங்கள் வாங்க போவதும் இல்லை என்று தெளிவுபடுத்துகிறார். 500 தீவுகளில் கான்பிலிட் தீவுகளும் ஒன்று. தற்போது நாட்டில் வரி செலுத்தும் மக்களும், வர்த்தக நிறுவனமோ அவை எல்லாம் வாங்குவதற்கு சூழலில் இல்லை என்பதையும் குறித்தும் அவர் கூறியிருக்கிறார்.


இதைத்தவிர ஆஸ்திரேலியாவில் ரகசிய தகவல்கள் அடங்கிய மூன்று பெரிய கேபில்கள் அந்தத் தீவின் பகுதி வழியாக செல்கின்றன. அதனால் தான் தற்போது தேச பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இந்தத் தீவை அந்நிய நாடுகள் வாங்குவதை தவிர்த்து வருவதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே பென்சில கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது என்று ஜப்பான், தைவான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் குற்றம் சாட்டி வரும் ஒரு சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவுக்கு சீனாவுக்கு வளம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News