Kathir News
Begin typing your search above and press return to search.

NRI இந்தியர்களின் பயண விதியை எளிமையாக்கிய கனடா அரசு!

வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் கனடா பயணத்திற்கு விதிகளை எளிமையாக உள்ளது கனடா அரசாங்கம்.

NRI இந்தியர்களின் பயண விதியை எளிமையாக்கிய கனடா அரசு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Jan 2022 2:11 PM GMT

கனடாவில் தற்போது அதிகரித்து வரும் நோய் தொற்றி எண்ணிக்கையும் மற்றும் உருமாறிய வைரஸின் தாக்கம் காரணமாக அங்கு அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக கனடா அரசாங்கம் ஏற்கனவே கடுமையான பயண விதிகளை பின்பற்றி வந்தது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் இருந்து புறப்படும் 18 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்படும் பரிசோதனையின் முடிவுகளை அவர்கள் எடுத்த பிறகுதான் விமானத்தில் ஏற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு இருந்தது.


ஆனால் தற்பொழுது இந்த பயண விதிகளை கனடா அரசாங்கம் திரும்ப பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து கனடா செல்ல இருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஜனவரி 28 முதல் இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக ட்விட்டர் செய்துள்ள கனடா ட்ரான்ஸ்போர்ட் கூறுகையில், "இந்தியாவில் இருந்து வருகை தரும் பயணிகளும், மேலும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளும் தற்போதைய புதிய விதிகளை பயன்படுத்தலாம் என்றும்" கூறியுள்ளது.


இருப்பினும் இந்தியாவில் இருந்து பயணம் மேற்கொள்ளும் இந்திய பயணிகள் கண்டிப்பான முறையில், RT PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் கனடாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ள இந்தியர்கள் இந்திய சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ள தேவை இல்லை என்றும் ஆனால் தாங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்வதற்காக ARRIVECAN என்ற மொபைல் பயன்பாட்டை செயலில் விவரங்களை பதிவேற்ற வேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Input & Image courtesy: Economic times


Next Story
கதிர் தொகுப்பு
Trending News