Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவுக்கு பிறகு வீடுகளை வாங்க விரும்பும் NRIகள்: காரணம் இதுதான் !

கொரோனாவுக்கு பிறகு குறிப்பாக 50% NRIகள் சொந்த வீடு வாங்க விரும்புகிறார்கள்.

கொரோனாவுக்கு பிறகு வீடுகளை வாங்க விரும்பும் NRIகள்: காரணம் இதுதான் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Sep 2021 1:14 PM GMT

இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலும் அனைவரின் கனவுகளில் ஒன்றாக சொந்த வீடு இருக்கும். தனக்கென்று ஒரு வீடு இருந்தால் தான் அது நமக்கு உரிய பாதுகாப்பை கொடுக்கும். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் தற்போது வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கிறது. தற்பொழுது நடந்த ஒரு சர்வே முடிவின்படி பெரும்பாலான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சொந்த வீடுகளை விரும்புகிறார்களாம்.


அதிலும் குறிப்பாக நோய்த்தொற்றுகள் ஆளான பிறகு தாயகம் திரும்பும் இந்தியர்கள் பெரும்பாலும் வீடுகள் வாங்க அதிக பணம் செலவழிக்கிறார்கள். இந்த சர்வேயில் குறிப்பாக 50 சதவீத NRIகள் இறுதி முடிவு, ரூ. 1.5 கோடிக்கும் குறைவான விலையுள்ள சொகுசு சொத்துக்களை விரும்புகிறார்கள் மற்றும் ரூ. 90 லட்சம் முதல் ரூ. 1.5 கோடி வரை விலை கொண்ட சொத்துக்களை 32% பேர் விரும்புகின்றனர். பெரும்பாலும் இந்தியர்கள் நோய்த்தொற்றுக்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் அதிகமாக ஈடுபட்டனர். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.


இந்த மாற்றத்தை பாதிக்கும் ஒரு முக்கிய காரணி என்னவென்றால், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகளவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால் பல NRI-கள் இந்தியாவுக்குத் திரும்ப முயன்றனர். வீட்டுவசதித் துறையில் இந்த காலகட்டத்தில் NRI வாங்குபவர்களுக்கு மலிவான வீடுகள் சிறந்த தேர்வாக இருந்தன. தற்போது, ​​NRI களால் விரும்பப்படும் சிறந்த பெருநகரங்கள் பெங்களூரு, புனே, சென்னை மற்றும் மும்பை. குறிப்பாக சண்டிகர், கொச்சி, சூரத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இடங்களையும் பெறுகிறது.

Input & Image courtesy:moneycontrol


Next Story
கதிர் தொகுப்பு
Trending News