Kathir News
Begin typing your search above and press return to search.

பல கோடி மதிப்பிலான சோலார் மின்சார மோசடியில் ஈடுபட்ட NRI கைது !

சவுதி அரேபியாவை சேர்ந்த NRI பல கோடி மதிப்பிலான சோலார் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

பல கோடி மதிப்பிலான சோலார் மின்சார மோசடியில் ஈடுபட்ட NRI கைது !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Dec 2021 1:56 PM GMT

மோசடி குற்றச்சாட்டின் பேரில் சவுதி அரேபியாவை சேர்ந்த NRI முகமது அல்தாப் அகமது என்பவரை ஹைதராபாத் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கரீம்நகரைச் சேர்ந்த அல்தாப் அகமது என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் ஊழியர். அதே வங்கியில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களையும் அகமது, தனது கூட்டாளிகளாக சேர்ந்து, சவுதி அரேபியாவில் வசிக்கும் மூன்று நபர்களையும், தெலுங்கானாவில் பல்வேறு இடங்களில் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தில் முதலீடு செய்ய, பெரும் லாபம் தருவதாக உறுதியளித்தார்.


மேலும் சோலார் திட்டச் செலவில் 25 சதவீதத்தை மட்டுமே மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. மொத்த திட்டச் செலவு ரூ.7.4 கோடியாக மதிப்பிடப்பட்டது. மேலும் சக கூட்டாளிகளிடம் இருந்து ரூ.2.18 கோடி NRI முகமது வசூலித்துள்ளனர் என்று கூறிய போலீஸார், பாதிக்கப்பட்ட மற்றவர்களிடமிருந்தும் அதே வழியில் ரூ.12 கோடி வசூலித்துள்ளனர்.


மேலும் அவர்களிடமிருந்து இவர்தான் 25 சதவீத தொகையை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர்கள் புகார் அளித்துள்ளார். சந்தேக நபர்கள், பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைப்பதற்காக, TSSPDCL இன் தலைமை பொறியாளரின் போலி மின் கொள்முதல் ஒப்பந்தம், போலி மின்னஞ்சல் ID-கள் மற்றும் பிற ஆவணங்களையும் போலியாக உருவாக்கியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Input & Image courtesy:Telanganatoday




Next Story
கதிர் தொகுப்பு
Trending News