Kathir News
Begin typing your search above and press return to search.

NRI: இந்திய குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறையை எளிதாக்கிய மத்திய அரசு !

இந்திய குழந்தைகளை தத்தெடுக்கும் NRIகள் தங்களுடன் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் நடைமுறையில் எளிதாக்கியது அரசாங்கம்.

NRI: இந்திய குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறையை எளிதாக்கிய மத்திய அரசு !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Sep 2021 1:10 PM GMT

இந்தியாவில் குழந்தைகளை தத்தெடுக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுடன் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் நடைமுறைகளை தற்போது அரசாங்கம் எளிதாக்கி உள்ளது. HAMA-இன் கீழ் தத்தெடுப்பது சிறார் நீதி அமைப்பின் கீழ், மேலும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 1956(HAMA) இன் கீழும் தத்தெடுக்கும் குழந்தைகளை NRIகள் மற்றும் OCI அட்டை வைத்திருப்பவர்கள், அவர்களுடன் அழைத்துச் செல்ல 'தடையில்லா' சான்றிதழ் பெறுவதை எளிதாக்கும் வகையில் புதிய விதிமுறைகளை அரசு அறிவிக்க உள்ளது. இது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.


இந்த விதிமுறைகள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ், நாடுகளுக்கிடையே தத்தெடுப்புகளைச் செயல்படுத்தும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தை (CARA) மற்றும் குழந்தையை வளர்ப்பு பெற்றோருடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க NOC கொடுக்க உதவும். இதன் மூலம் NRIகள் மற்றும் OCI அட்டை வைத்திருப்பவர்களும் உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களுக்கு இணையாக நடத்தப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அவர்களின் முன்பு இருந்து வந்த நடவடிக்கைகள் குறைக்கப் பட்டுள்ளன.


முன்பு வரை குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெற்றோர்கள் வெளிநாடுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது என்பது போன்ற தடை இருந்தது. இந்த சட்டத் தடை காரணமாக, HAMA இன் கீழ் தத்தெடுத்த NRI பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல உத்தரவு பெற நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு புதிய விதிமுறைகள் குடும்பத்தின் விரிவான சரிபார்ப்பு செயல்முறையை அமைப்பதன் மூலம் வளர்ப்பு பெற்றோரின் பல்வேறு கவலை ஆகியவற்றையும் களைய செய்யும்.

Input & Image courtesy: Economictimes



Next Story
கதிர் தொகுப்பு
Trending News