Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் வெளிநாட்டு பயணத்தின் பின்னணியில் இவ்வளவு நன்மைகளா? - ஒரு அலசல்!

பிரதமர் மோடி அவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு பின்னாலுள்ள வெளியுறவுக் கொள்கைகளில் தாக்கம் என்ன?

பிரதமரின் வெளிநாட்டு பயணத்தின் பின்னணியில் இவ்வளவு நன்மைகளா? - ஒரு அலசல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Jun 2022 2:35 AM GMT

பிரதமராக பதவியேற்ற கடந்தகால தலைவர்களின் வெளிநாட்டு பயணங்களை பார்க்கும்போது அது சற்று குறைவாகத்தான் இருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பிறகு வெளிநாடு சுற்றுப்பயணம் அதிகமாக இருந்தது. காரணம் வெளிநாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்த வெளியுறவு தொடர்பான கொள்கைகளை நம் நாட்டுடன் சுமுகமான முறையில் செய்வது தான் இதன் முக்கிய நோக்கம். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்ற பிறகு தெற்காசிய நாட்டு தலைவர்களை விழாவிற்கு அழைப்பு விடுக்க மோடி அவர்கள் செய்த முயற்சி தான் இதில் முதல் ஆரம்பம். உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நாடுகளை இந்தியாவுடன் நட்பு நாடாக ஆகிய பெருமையும் மோடி அவர்களைச் சாரும்.


உதாரணமாக நாம் எப்படி நம்முடைய விருந்தினர்கள் வீட்டில் சில காலமாவது சென்று வருவோமா? அதே மாதிரி நாட்டில் வளங்களை அதிகப்படுத்துவதற்கு மற்றும் பிற நாடுகளில் நட்புகளை வளர்ப்பதற்கும் அன்னிய நாட்டு பயணங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம். அதிக அளவு உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர்களில் மோடி அவர்கள் நீங்காத இடம் பிடித்திருப்பார் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அவர் பிரதமராக பதவியேற்ற நாள் முதல் தற்போது மேற்கொண்ட ஜப்பான் நாட்டு பயணம் வரை அனைத்து பயணத்திலும் அவர் நட்புறவை புதுப்பித்துக் கொள்வதில் கவனமாக இருந்து வருகிறார்.


பிரதமராக பதவியேற்று எட்டு ஆண்டுகள் பிறகு அவர் பல்வேறு நடவடிக்கைகளை இந்தியாவிற்காக மேற்கொண்டுள்ளார் குறிப்பாக ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் பிரதமர்களை நம்முடைய நாட்டிற்கு வரவழைத்த பெருமையும் மோடி அவர்களைச் சாரும். நம்முடைய ஆன்ம ரீதியான தொடர்பு மற்றும் லட்சியங்களை பகிர்ந்துகொள்வதன் மூலம் வரும் நேர்மறையான ஆற்றலின் உறவுகளை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்தார்

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News