Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைன் நெருக்கடி: இந்திய மாணவர்கள் வெளியேறும்படி அறிவுரை!

உக்ரைனில் நடக்கும் பதட்டமான சூழ்நிலையை காரணமாக அங்கு இருக்கும் இந்திய மாணவர்களை வெளியேறும்படி இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

உக்ரைன் நெருக்கடி: இந்திய மாணவர்கள் வெளியேறும்படி அறிவுரை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Feb 2022 2:19 PM GMT

உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியில் ரஷ்யா சுமார் இலட்சக்கணக்கான ராணுவ வீரர்களை நிலை நிறுத்தி உள்ளது. இதன் காரணமாகவே மட்டும் ரஷ்யாவிற்கு போர் ஏற்படும் என்றும் அறியப்படுகிறது. குறிப்பாக அந்த ராணுவ வீரர்கள் பல்வேறு நவீன ஆயுதங்களுடன் அது நிலைநிறுத்தப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அங்கு போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறும்படி, தற்பொழுது அந்தந்த அரசாங்கம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய தூதரகம் அங்கு இருக்கும் மாணவர்களுக்கும் மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


உக்ரைன் நெருக்கடி நிலைமை பதட்டமாக இருப்பதால், குடிமக்கள், குறிப்பாக மாணவர்களை நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்துகிறது. தற்போதைய சூழ்நிலையின் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள், குறிப்பாக தங்குவதற்கு அவசியமில்லாத மாணவர்கள், தற்காலிகமாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கெய்வில் உள்ள இந்தியத் தூதரகம் ஒரு அறிவிப்பை அனுப்பியுள்ளது. உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு சாத்தியமானதால் பதட்டங்கள் அதிகரித்து வருவதால் இது வந்துள்ளது.


படையினரை நிலைநிறுத்தியது தொடர்பாக இதுவரை ரஷ்யா போதிய விளக்கமளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது அமெரிக்கா. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது. சில மேற்குலக நாடுகளைச் சேர்ந்த உளவு அமைப்புகள், 2022ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Input & Image courtesy: Economic times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News