Kathir News
Begin typing your search above and press return to search.

"முழு இந்துத்துவ ஆட்சி வந்துடும் வாங்க எதிர்க்கலாம்" - அறைகூவல் விடுக்கும் கீ.வீரமணி!

முழு இந்துத்துவ ஆட்சி வந்துடும் வாங்க எதிர்க்கலாம் - அறைகூவல் விடுக்கும் கீ.வீரமணி!

Mohan RajBy : Mohan Raj

  |  16 April 2021 2:45 AM GMT

பத்திரப்பதிவு துறையில் மற்ற நாட்களை காட்டிலும் சுப தினங்களில் பத்திரப்பதிவு செய்ய கட்டணங்கள் அதிகம் என்ற அறிவிப்பை தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை வெளியிட்டிருப்பதற்கு திராவிடர் கழக கி.வீரமணி "இது கூடவே கூடாது" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அறிக்கையறித்துள்ள அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "சுப நாட்களில், மக்கள் விரும்பும் சுபயோக சுபதினங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களாயினும், அன்றைய தினத்தில் பத்திரப்பதிவு செய்தால், சொத்துப் பெருகும், வளம் செழிக்கும் என்று நம்பும் மூடநம்பிக்கையாளர்களை ஊக்குவிப்பதுபோல், அன்று கூடுதல் கட்டணம் செலுத்தி, பத்திரப்பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசே அறிவித்திருப்பது அரசமைப்புச் சட்ட விரோதச் செயல்.

மற்ற துறைகளுக்கு விடுமுறை என்றால், அன்றைய தினம் பத்திரப்பதிவு அலுவலகத்தைத் திறந்து பதிவு செய்தல் சட்ட முரண்பாடு அல்லவா?. இதை அனுமதித்தால், இனி ஜோதிடமே கூட ஆஸ்தான ஜோதிடமாக ஆகிவிடும். இதனை அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முனையும் அத்தனைப் பேரும், பகுத்தறிவாளர்களும், மதச் சார்பற்றோருடன் இணைந்து கண்டித்து, இதுபோன்ற திட்டங்களை தமிழக அரசை பின்வாங்கச் செய்யவேண்டும்.

இதில் சும்மா இருந்தால், முழு இந்துத்துவ சாம்ராஜ்ஜியமாகவே ஆட்சி ஆர்.எஸ்.எஸ் சார்பு அதிகாரவர்க்கமாக ஆகிவிடக் கூடும் எச்சரிக்கை. எதிர்ப்பு மலைபோல் உருவாகட்டும்" என அறிக்கை விடுத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News