Kathir News
Begin typing your search above and press return to search.

வரலாற்றில் முதன் முறையாக மோடி அரசை குறை கூறாமல் தடுப்பூசி எடுத்துக்கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின்!

வரலாற்றில் முதன் முறையாக மோடி அரசை குறை கூறாமல் தடுப்பூசி எடுத்துக்கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  23 April 2021 3:00 AM GMT

நேற்று முன்தினம் தனது குடும்பத்தாருடன் இன்ப சுற்றுலா சென்றதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய தி.மு.க தலைவர் ஸ்டாலின். நேற்று உடனே கொரோனோ இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பாக புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டு குறிப்பிட்ட அவர், "இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன்.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்!

நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!" என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதில் அரசியல் லாபத்திற்காக குறை கூறி வரும் ஸ்டாலினே கொரோனோ தடுப்பூசி முறையாக எடுத்துக்கொண்டுள்ளது ஆச்சர்யப்பட வைத்துள்ளதாக பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

இதுபோல் மத்திய அரசின் மக்கள் நலன் நடவடிக்கைகளுக்கும் அரசியல் சாயம் பூசாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு நடந்துகொள்வது நன்மை பயக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News