Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்கு எண்ணிக்கையின் போது குண்டர்களை இறக்கி சதிச் செயலில் ஈடுபட தி.மு.க திட்டம்!

வாக்கு எண்ணிக்கையின் போது குண்டர்களை இறக்கி சதிச் செயலில் ஈடுபட தி.மு.க திட்டம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  1 May 2021 6:30 AM IST

வாக்கு எண்ணிக்கையின் போது, திமுகவினர் குண்டர்களை இறக்கி சதிச் செயலில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது என்பது குறித்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில், திமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான முடிவுகள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

200 பேரிடம் கருத்து கேட்டுவிட்டு கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. கருத்துக்கணிப்பு எந்த காலத்திலும் எடுபடாத ஒன்று. கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கிய கட்சி அதிமுக. அதிமுக கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்று பெறும்.

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தமிழக மக்கள் மகிழ்ச்சி பெறும் வகையில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற செய்தி வரும்.

திமுகவினர் ஒவ்வொரு முறையும் தங்களுக்கு தான் வெற்றி பெற்றுள்ளோம் என போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். ஆனால் கடைசியில் அதிமுக தான் வெற்றி பெறும். எனவே இம்முறையும் போஸ்டர் அடித்துவிட்டு திமுக தோற்றுப் போகும் நிலை வரும்.

வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையங்களில் குண்டர்களை அனுப்பி வைக்கும் செயல்களையும் திமுக செய்யும். இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News