'துக்கடா' என ஏளனம் செய்தவர்களை துரத்தியடித்த வானதி ஸ்ரீனிவாசன்!

துக்கடா என ஏளனம் செய்தவரை துரத்தியடித்த வானதி ஸ்ரீனிவாசன்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க'வின் தேசிய மகளிரணி தலைவர் திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் அவரை எதிர்த்து போட்டியிட்ட சினிமா நடிகர் கமல்ஹாசன் அவர்களை தேர்தலில் வீழ்த்தியுள்ளார்.
இதில் விஷேசம் என்னவெனில் இருவரும் களத்தில் பிரச்சாரம் செய்து வரும் சமயத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி'க்கு பதில் தரும் வகையில் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி எங்கள் தலைவரை பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால்தான் யாருக்கு நிர்வாக திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம்
அவரது சவாலை ஏற்றுக்கொள்கிறோம். முதலில் இந்தியாவை ஆளும் மாண்புமிகு. நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார். அதனை அடுத்து நிதியமைச்சர் மாண்புமிகு. நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார். அடுத்தடுத்து பா.ஜ.க அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு கடைசியாக "வானதி சீனிவாசன் போன்ற துக்கடா" தலைவர்களுடன் வைத்துக்கொள்ளலாம். மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும்" என மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டது.
இப்படி தனக்கு எதிராக போட்டியிடுபவரை ஒரு பெண் என்றும் பாராமல் 'துக்கடா' என ஏளனம் செய்த மக்களி நீதி மய்யத்திற்கு சரியான பதிலடியை தேர்தல் மூலம் அளித்துள்ளார் திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள்.
சில நிமிடம் முன்பு தேர்தல் ஆணையம் சார்பில் திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது