Begin typing your search above and press return to search.
அமைச்சரவையில் உதயநிதியா? செய்தியாளர்களுக்கு பதிலளித்த உதயநிதி!
By : Mohan Raj
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6'ஆம் தேதி நடைபெற்றது. இறுதியில் சுமார் 159 தொகுதிகளை கைப்பற்றி தி.மு.க கூட்டணி தேர்தலில் வெற்றி கண்டுள்ளது. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிப்பெற்றனர்.
நேற்று மாலை உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''இது தலைவருக்கான வெற்றி, கலைஞருக்கான வெற்றி. தொகுதி மக்கள் நிறைய கோரிக்கை கொடுத்திருக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்'' என்றார். அமைச்சரவையில் உங்களுக்கு இடம் உண்டா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , மே 7-ம் தேதி தெரிந்துவிடும் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
Next Story