Kathir News
Begin typing your search above and press return to search.

வெற்றி பெற்ற நாள் முதல் பம்பரமாக சுழன்று மக்கள் பணியை சிறப்பாக செய்யும் நாகர்கோயில் எம்.எல்.ஏ காந்தி!

வெற்றி பெற்ற நாள் முதல் பம்பரமாக சுழன்று மக்கள் பணியை சிறப்பாக செய்யும் நாகர்கோயில் எம்.எல்.ஏ காந்தி!

Mohan RajBy : Mohan Raj

  |  6 May 2021 3:00 AM GMT

வயது, அனுபவம் ஒரு மூத்த அரசியல்வாதியை திறமையான ஆட்சியாளராக உருவாக்கும் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார் நநாகர்கோயில் பா.ஜ.க எம்.எல்.ஏ காந்தி ஐயா அவர்கள்.

கடந்த மே இரண்டாம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க 4 இடங்களை பெற்றது. இதில் நாகர்கோயில் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட காந்தி அவர்கள் வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

இவர் வெற்றி பெற்ற நாள் முதல் மக்கள் பணியை உடனே துவங்கிவிட்டார். மாவட்ட ஆட்சியர் அர்விந்த் இ.ஆ.ப அவர்களை சந்தித்து கொரோனோ நடவடிக்கைகளை பற்றிய கலந்தாலோசனை, நாகர்கோயில் நீர் ஆதாரமான முக்கடல் நீர்த்தேக்கத்தை பார்வையிட்டு அதனை பராமரிப்பது குறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசனை, இது மட்டுமின்றி மேற்கு வங்கத்தில் நடைபெறும் அராஜகத்தை கண்டித்து மக்களுடன் மக்களாக களத்தில் ஆர்ப்பாடம் என மனிதர் பம்பரமாக சுழல்கிறார். இத்தனைக்கும் இவர் வெற்றி பெற்று இன்னும் ஒரு வாரம் கூட முழுதாக முடியவில்லை.


இதர கட்சி எம்.எல்.ஏ'க்கள் பதவி ஏற்பு விழாவை பற்றி சிந்திப்பதிலும், வெற்றியை பேனர் வைத்து கொண்டாடுவதிலும் பரபரப்பாக இயங்குவதில் கவனம் செலுத்துகையில் நாகர்கோயில் எம்.எல்.ஏ காந்தி அவர்கள் ஒவ்வொரு மணித்துளியையும் ஏதாவது உருப்படியா செய்ய செலவழிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது இவருக்கு வாக்களித்த மக்களுக்கு "இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா?" என ஆச்சர்யப்பட வைத்துள்ளது.


அனுபவம், தான் சார்ந்த இயக்கத்தின் சுயநலம் பாராத இயல்பு, மக்களை மதித்து அவர்கள் வாக்குகளை பெரிதாக எண்ணும் பொதுநல மனது, அடுத்த தேர்தலை மனதில் கொள்ளாமல் ஏற்கனவே வெற்றி பெற்றதற்கு இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவரை இந்த வயதிலும் இளைஞர் போன்று இவ்வாறு பம்பரமாக சுழல வைக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News