புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனோ - அதிர்ச்சியில் தொண்டர்கள்!

கொரோனோ இரண்டாம் அலை நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது, மத்திய அரசு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள் ஊரடங்கு நடவடிக்கைகள் மூலம் கொரோனோ சங்கிலியை உடைக்க போராணிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் புதுச்சேரியின் முதல் அமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந் தேதி கவர்னர் மாளிகையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்தநிலை யில் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பரி சோதனை செய்யப்பட்டது.
இதில் முதல் அமைச்சர் ரங்கசாமியுடன் மிகவும் நெருக்கமாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜவகருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே முதல் அமைச்சர் ரங்கசாமிக்கு மருத்துவக் குழுவினர் கொரோனா தொற்று பரிசோதனை செய்தனர்.
இதில் அவருக்கு தொற்று இருப்பது நேற்று இரவு உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் (எம்.ஜி.எம்.) அனுமதிக்கப் பட்டார். முதல் அமைச்சராக ரங்கசாமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.