Kathir News
Begin typing your search above and press return to search.

"ராசுதேவர் பாலு ராஜா எனும் நான்" - நான் "தேவர்" என சாதியை குறிப்பிட்டு பதவி ஏற்றுகொண்ட தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா!

ராசுதேவர் பாலு ராஜா எனும் நான் - நான் தேவர் என சாதியை குறிப்பிட்டு பதவி ஏற்றுகொண்ட தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா!
X

Mohan RajBy : Mohan Raj

  |  13 May 2021 6:00 AM GMT

"ஈ.வே.ராமசாமி சாதியை ஒழித்தார், இது பெரியார் மண், ஈ.வே.ரா வழியிலெ நாங்கள், எங்களுக்கு சாதி முக்கியமில்லை, சமத்துவமே முக்கியம், நாங்கள் சாதி பார்க்கவே மாட்டோம்" என விதவிதமாக தி.மு.க'வினர் பொய்கள் கூறி வந்தாலும் அவர்கள் நடவடிக்கையில் அவர்களின் சாதி வெறி தெரிந்துவிடும். சாதி பார்த்து கட்சியில் போட்டியிட வைப்பது, சாதி பார்த்து பொறுப்புகளில் நியமனம் செய்வது என அனைத்திலும் தி.மு.க சாதி பார்க்கும் என மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.

நேற்று தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்றுக்கொண்டனர். அப்பொழுது மன்னார்குடி எம்.எல்.ஏ'வும் தி.மு.க'வின் பொருளாருமாகிய பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றார்.

அவர் பதவி ஏற்று உறுதிமொழி எடுத்துகொண்ட சமயத்தில் தன் பெயரை குறிப்பிடும் போது "'தளிக்கோட்டை ராசுதேவர் பாலு ராஜா எனும் நான்" என குறிப்பிட்டு பதவி பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார்.

மேற்கூறியவாறு நாங்கள் ஈ.வே.ரா வழி வந்தவர்கள், நாங்கள் சாதி பார்ப்பதில்லை என தி.மு.க தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் தி.மு.க'வினரின் சாதி வெறி அப்பட்டமாக அவ்வபோது தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News