Kathir News
Begin typing your search above and press return to search.

"சுளுக்கு எடுத்து விடுவோம்" பத்திரிகையாளர்களுக்கு திமுக பிரமுகர் மிரட்டல்!

சுளுக்கு எடுத்து விடுவோம் பத்திரிகையாளர்களுக்கு திமுக பிரமுகர் மிரட்டல்!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  15 May 2021 1:00 AM GMT

நாங்கள் பொறுமையாக இருக்கிறோம் என்பதற்காக நினைப்பதலயெல்லாம் பேசினால் நாக்கிலும் கையிலும் சுளுக்கு எடுக்கப்படும் என்று மூத்த திமுக பிரமுகர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் "நாங்கள் பொறுமையாக இருப்போம் ஆனால் பொறுமையாக இருக்கிறோம் என்பதற்காக நினைத்ததை எல்லாம் பேசினால்" என்று கூறி விட்டு நாக்கை கத்தரித்து விடுவோம் என்பது போல் சைகை செய்துள்ளார். மேலும் "அதற்கு சுளுக்கு எடுக்க வேண்டியது தான். சுளுக்கு எடுக்கப்படும்" என்று அந்த சைகைக்கு விளக்கமும் அளித்துள்ளார்.

சில பேருக்கு நாக்கில், திமுக என்றால் வேறு மாதிரி எழுதும் மற்ற சிலருக்கு கையில் சுளுக்கு எடுக்க வேண்டியதிருக்கிறது என்றும் அதுவும் எடுக்கப்படும் என்றும் அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்து ஒரு வாரமே ஆகும் நிலையில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தை எரித்த தங்களது வன்முறைக் கலாச்சாரத்தை தொடர்வது உறுதி என்பதைக் காட்டுவதாகவே இந்தப் பேச்சு அமைந்துள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை, அரசு மருத்துவமனைகளுக்கு வெளியில் ஆம்புலன்சிலேயே சிகிச்சை, மயானங்களில் குவியும் சடலங்கள் என்று தமிழகத்தில் மிக மோசமான நிலைமை இருப்பதை பத்திரிகையாளர்கள் வெளியுலகிற்கு கொண்டு வரக் கூடாது என்று மிரட்டும் விதமாக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசி இருப்பதாகவும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் பழனிச்சாமி குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினர் தற்போது உண்மையான தகவல்களை வெளியிடுவதைக் கூட எதிர்த்து மிரட்டல் விடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News