Kathir News
Begin typing your search above and press return to search.

"கொரோனோ மூன்றாம் அலை வந்தாலும் நாங்க இருக்கோம்" - பால்வளத்துறை அமைச்சர் நாசர்!

கொரோனோ மூன்றாம் அலை வந்தாலும் நாங்க இருக்கோம் - பால்வளத்துறை அமைச்சர் நாசர்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 May 2021 11:30 AM IST

இரண்டாம் அலையில் தமிழகம் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் "கொரோனா 3வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக" அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையினை பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.அப்போது ஆவடி வியாபாரிகள் சங்கம் சார்பில் 3 லட்சம் மதிப்பீட்டில் 6 ஆக்சிஜன் கருவிகளை அமைச்சர் நாசரிடம் வழங்கினார்கள்.


இதனையடுத்து, பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களிடத்தில் பேட்டியளிக்கையில் கூறியதாவது, "திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருவதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு பகல் பாராது அயாராது உழைத்து வருவதால் தமிழகத்தில் கொரோனா 3வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தாயாரக உள்ளது" என தெரிவித்தார்.

இந்திய அளவில் கொரோனோ தொற்றில் மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம் தற்பொழுது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடதக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News