Kathir News
Begin typing your search above and press return to search.

"ஸ்டாலின் முடிவால் சமுதாயம் சீரழியும் வாய்ப்புள்ளது" - காங்கிரஸ் எதிர்ப்பு குரல்..!

ஸ்டாலின் முடிவால் சமுதாயம் சீரழியும் வாய்ப்புள்ளது - காங்கிரஸ் எதிர்ப்பு குரல்..!
X

Mohan RajBy : Mohan Raj

  |  22 May 2021 6:00 AM GMT

ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிற ஸ்டாலின் முடிவால் சமுதாயம் சீரழியும் நிலை உள்ளது என்று கே.எஸ்.அழகிரி வெளிப்படையாக கூறியுள்ளார்.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்கு 30 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறையில் பேரறிவாளனோடு அடைபட்டுகிடக்கும் நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். .இது தொடர்பாக துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸார் இப்பொழுதும் எதிர்க்க துவங்கியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, "ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதை காங்கிரஸ் ஏற்காது என்று கூறியுள்ளார். சிறைக்கைதிகள் விடுதலை என்பது நீதிமன்றத்தால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அரசியல் அழுத்தங்கள் அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்வது நல்லது அல்ல என்று கூறியுள்ளார். ஏழு பேரை தமிழரக்ள் என்று கூறி விடுதலை செய்ய முயற்சிக்கும் அரசியல் கட்சிகள் அந்த ஏழு பேரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதை மறந்துவிடக்கூடாது" என்று அழகிரி தெரிவித்துள்ளார்.


மேலும் பேசிய அவர், "அரசியல் அழுத்தங்கள், தமிழர்கள் என்றெல்லாம் கூறி சிறையில் இருக்கும் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய ஆரம்பித்தால் சமுதாயம் சீரழிந்துவிடும். மேலும் இந்த ஏழு பேரை தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக விடுதலை செய்வதுது தவறான முன் உதாரணம் ஆகி சமுதாயத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" எனவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News