Kathir News
Begin typing your search above and press return to search.

குடிநீர் குழாய்களை இரவோடு இரவாக பெயர்த்து எடுத்து தி.மு.க-வினர் அராஜகம்!

குடிநீர் குழாய்களை இரவோடு இரவாக பெயர்த்து எடுத்து  தி.மு.க-வினர் அராஜகம்!

ParthasarathyBy : Parthasarathy

  |  28 May 2021 11:38 AM GMT

தி.மு.க கட்சி என்றாலே அராஜகப்போக்கில் ஈடுபடுவர் என்ற குற்றச்சாட்டு பொது மக்களிடையே பல காலமாக இருந்து வருகிறது. அதை உண்மையாக்கும் நிலையில், அந்த கட்சி தொண்டர்களின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. குறிப்பாக தி.மு.க ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்னரே சென்னை, ஜெ ஜெ நகரில் இருக்கும் அம்மா உணவகத்தை அக்கட்சி தொண்டர்கள் தாக்கிய சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.


அந்த வரிசையில் ராயபுரத்தில் அமைந்திருக்கும் அம்மா மினி கிளினிக்கில் இருந்த அ.தி.மு.க கல்வெட்டுகளை இரவோடு இரவாக தி.மு.க வினர் பெயர்த்து எடுத்துள்ளனர். அது மட்டுமின்றி, அந்த தொகுதி மக்களின் தாகத்தை தணிக்க அ.தி.மு.க ஆட்சியில் அங்கு வைக்கப்பட்ட குடிநீர் குழாய்களையும், அங்கு வைக்கபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயர் இருந்த கல்வெட்டுகளையும் தி.மு.க-வினர் அடித்து சேதப்படுத்தியது அந்த தொகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்செயல்களில் ஈடுபட்ட தி.மு.க-வினரை ராயபுரம் மக்கள் கண்டித்து வருவதோடு, காவல் துறையினர் இந்த செயலில் ஈடுபட்ட நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அம்மா உணவகம் தாக்கப்பட்ட போது அதை கண்டித்து கட்சியிலிருந்து அந்த தொண்டரை நீக்கி அந்த பெயர் பலகையை எடுத்த இடத்தில் வைக்க உத்தரவிட்ட ஸ்டாலின், இந்த செயலையும் கண்டித்து தண்ணீர் குழாய் மற்றும் கல்வெட்டை அதே இடத்தில் வைக்க உத்தரவிடுவாரா என்பது பொது மக்களின் கேள்வி.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News