Kathir News
Begin typing your search above and press return to search.

இனி நிலஅபகரிப்பு, திருட்டு என அனைத்து புகார்களையும் முதல்வரிடம் நேரடியாக அளிக்கலாம்!

இனி நிலஅபகரிப்பு, திருட்டு என அனைத்து புகார்களையும் முதல்வரிடம் நேரடியாக அளிக்கலாம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 Jun 2021 10:30 AM GMT

இனி நிலஅபகரிப்பு, திருட்டு, கடைகளில் அராஜகம், மாமூல் வேட்டை என அனைத்து புகார்களையும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார் அளிக்கும் வகையில், தனிப்பிரிவு இணையதளம் புதிதாகத் தொடங்கப்பட்டு உள்ளது.

"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ், பொது மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் தீர்வுகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது "முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார் அளிக்கும் வகையில், தனிப்பிரிவு இணையதளம்" புதிதாகத் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப் பிரிவில், cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக, பொது மக்கள் தங்களது புகார்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அளிக்கலாம்" என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News