Kathir News
Begin typing your search above and press return to search.

பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

ParthasarathyBy : Parthasarathy

  |  10 Jun 2021 6:03 AM GMT

அ.தி.மு.க கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஜூன் 14 அன்று நண்பகல் 12:00 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறும் என்று கழக ஒருங்கிணைப்பாளரும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


இந்த அறிவிப்பில் கூறியதாவது "இந்த கூட்டத்தில் கலந்து கொல்லும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடிக்குமாறும் மற்றும் அனைவரும் MLA அடையாள அட்டையுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஜூன் 14 அன்று கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெறுவதால், கொரோனா பெருந்தொற்று காரணமாக கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தலைமை கழகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் மற்றும் கழக வளாகத்திற்குள் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையம் அனுமதிக்க இயலாது என்று தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News