Kathir News
Begin typing your search above and press return to search.

முன் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பா.ஜ.க தலைவர் முருகன்!

முன் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பா.ஜ.க தலைவர் முருகன்!

ParthasarathyBy : Parthasarathy

  |  10 Jun 2021 8:20 AM GMT

பிரதமர் மோடியின் ஏழு ஆண்டு ஆட்சி நிறைவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பா.ஜ.க கட்சியினர் அதை சேவா தினமாக கொண்டாடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் மற்றும் முக்கிய தலைவர்கள் இந்த கொரோனா காலத்தில் தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு வகையான பொருட்கள் வழங்குதல், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாநிலம் முழுவதும் வழங்குதல், கொரோனா உபகரணங்கள் வழங்குதல், முகக்கவசம் வழங்குதல் போன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.


இன்று மத்திய சென்னையில் முன் களப்பணியாளர்களுக்கு பா.ஜ.க வின் மாநில தலைவர் எல்.முருகன் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க ட்விட்டர் பக்கத்தில் "மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் முன் களப்பணியாளர்கள் மற்றும் எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாநிலத் தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள்." என்று குறிப்பிட்டு இருந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News