Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி ஆய்வு செய்த எஸ்.பி. வேலுமணி!

கோவை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி ஆய்வு செய்த எஸ்.பி. வேலுமணி!

ParthasarathyBy : Parthasarathy

  |  12 Jun 2021 10:57 AM GMT

இந்த கொரோனா தமிழகத்தில் உள்ள கட்சிகள் பொது மக்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி கோவையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினார் மற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்தார்.


இந்த செயல் குறித்து எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் "கோவை மாவட்டம் பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கினேன். பின்னர் அருகில் உள்ள அரசு மேப்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டேன்.


மேலும் பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்து, முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம், உணவு உள்ளிட்டவற்றை வழங்கினேன்." என்று அவர் கூறி இருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News