Kathir News
Begin typing your search above and press return to search.

சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து மம்தா தாக்கல் செய்த மனு இன்று விசாரணை!

சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து மம்தா தாக்கல் செய்த மனு இன்று விசாரணை!

ParthasarathyBy : Parthasarathy

  |  24 Jun 2021 10:48 AM GMT

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்றார். ஆனால், மேற்கு வங்கத்தின் முதல் அமைச்சராக பொறுபேற்ற மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க-வின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்ததை அடுத்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியது "நந்திராம் தொகுதியில் பணப்பட்டுவாடா, லஞ்சம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றிருக்கிறார். 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவானது இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போதும் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்'' என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


இந்த நிலையில் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில், பா.ஜ.க சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் முடிவை பொறுத்தே மம்தா பானர்ஜி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News