Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்டா பிளஸ் வைரஸ் மூன்றாவது அலையாக உருவெடுக்குமா? தமிழக அமைச்சரின் பதில்!

டெல்டா பிளஸ் வைரஸ் மூன்றாவது அலையாக உருவெடுக்குமா? தமிழக அமைச்சரின் பதில்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jun 2021 1:00 PM IST

டெல்டா பிளஸ் வைரஸ் கொரோனா மூன்றாவது அலையாக மாறும் முன் தமிழக அரசு தடுக்குமா? அதற்கு தமிழக அரசின் நடவடிக்கை என்ன என அமைச்சர் ம.சுப்ரமணியன் பதிலளித்துள்ளார்.

மா.பொ.சி-யின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரசால் 9 நபர்கள் பாதிக்கப்பட் டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த மே மாதத்திலேயே இந்த தொற்று உருவாகியுள்ளதாகவும், 9 நபர்கள் வீடு, வசிக்கும் பகுதி, தொடர்புடைய நபர்களை கண்காணித்ததில் அவர்கள் குணமாகி பணிகள் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்" கூறினார்.

மேலும், "இதுக்குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறிய அவர், இதனால் கொரோனா 3வது அலையாக உருவெடுக்குமோ என்ற அச்சம் இருப்பதால், சென்னையில் பகுப்பாய்வு பரிசோதனை கூடம் அமைக்க திட்டமிடப்பட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், ரூ. 2.50 கோடி செலவில் இயந்திரங்கள் வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார் அவர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News