Kathir News
Begin typing your search above and press return to search.

நீட் தேர்வு அரசியலில் வெளுத்த தி.மு.கவின் சாயம்! "நீட் தேர்வுக்கு மாணவர்கள் படிப்பது தவறில்லை" மா.சுப்பிரமணியன்!

நீட் தேர்வு அரசியலில் வெளுத்த தி.மு.கவின் சாயம்! நீட் தேர்வுக்கு மாணவர்கள் படிப்பது தவறில்லை மா.சுப்பிரமணியன்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  13 July 2021 7:30 AM IST

"நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்" என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் தி.மு.க'வின் பொய் வாக்குறுதி அம்பலமாகியுள்ளது.

நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பம் நாளை முதல் விநியோகிக்கப்படும். இந்நிலையில் நீட் தேர்வை பிரதானப்படுத்தி அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த தி.மு.க சார்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுக அரசின் உறுதியான கொள்கை, இதில் எவ்வித கருத்து மாறுபாடும் இல்லை. நீட் தேர்வு தேவையில்லை என ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக அரசு நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான உறுதியான, சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்வில் இருந்து மாணவர்களை காக்கும் நோக்கில் தான் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல் நீட் தேர்வுக்காக அரசு அளித்து வரும் பயிற்சியும் தொடர்ந்து வருகிறது. ஏனெனில் கடைசி நேரத்தில் தேர்வு எழுதியாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் மாணவர்கள் அதனை எதிர்கொள்ளவே தயார்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார். நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதில் தவறில்லை என்றும், படிப்பது அனைத்தும் மறக்க கூடியது அல்ல என்றும்" சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க அரசியர் ரீதியாக கபடநாடகம் போட்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி அரசியல் செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News