Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை மண்ணடியில் மூர்க்கமாக தாக்கிகொண்ட அமைதி மார்க்கத்தினர்!

சென்னை மண்ணடியில் மூர்க்கமாக தாக்கிகொண்ட அமைதி மார்க்கத்தினர்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 July 2021 3:30 PM GMT

சென்னையில் இருதரப்பு அமைதி மார்க்கத்தினர் மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய பகுதியில் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் பொதுவெளியில் மோதிக்கொண்டனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த ஹைதர் அலியை அமைப்பில் இருந்து நீக்கி, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பான வழக்கில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஹைதர் அலி தரப்பு பயன்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இத்தகைய சூழலில் சென்னை, மண்ணடியில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்துக்கு அருகிலேயே த.மு.மு.க என்ற பெயரில் ஹைதர் அலி தரப்பு புதிய அலுவலகத்தை திறந்துள்ளனர். அங்கு த.மு.மு.க தலைமை அலுவலகம் என பேனர் வைத்துள்ளனர்.

பெயரை பதிவு செய்திருப்பதால் பேனரை அகற்ற முடியாது என காவல்துறையினர் கூறிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றிரவு மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஹைதர் அலி தரப்பு அலுவலகத்துக்கு சென்றபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.

பின்னர் காவல்துறை தலையிட்டு மூர்க்கமாக தாக்கி கொண்ட இருதரப்பினரையும் விலக்கியது. இந்த கைகலப்பில் ஒரு காவலர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். இதனால் மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News