Kathir News
Begin typing your search above and press return to search.

வந்தது டாஸ்மாக் விடியல்.. விலை உயர்த்த திட்டம் : மதுபிரியர்கள் அதிர்ச்சி!

வந்தது டாஸ்மாக் விடியல்.. விலை உயர்த்த திட்டம் : மதுபிரியர்கள் அதிர்ச்சி!

Mohan RajBy : Mohan Raj

  |  18 July 2021 1:15 AM GMT

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டி அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனோ ஊரடங்கிற்கு பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டதோடு மாற்றப்பட்டு உள்ளன. பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வந்த மதுக்கடைகள் தற்போது காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது.

தற்போது விலையை உயர்த்துவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த ரக மதுவகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபானங்களுக்கு 30 ரூபாயும், உயர்ரக மதுபானங்களுக்கு 50 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்பு இந்த விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News