Kathir News
Begin typing your search above and press return to search.

நீட் தேர்விற்கு தயாராகும் விடியல் அரசு.. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க உதவும் பள்ளிக்கல்வித்துறை!

நீட் தேர்விற்கு தயாராகும் விடியல் அரசு.. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க உதவும் பள்ளிக்கல்வித்துறை!
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 July 2021 5:11 PM IST

நீட் தேர்வு விண்ணப்பம் பூர்த்தி செய்ய நாங்கள் இருக்கிறோம் என பள்ளிகல்வித்துறை முன்வந்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது ஜூலை 13ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 6ம் தேதி கடைசி நாளாகும். இதனால் நீட் எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒன்றிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பத்தில் சில மாணவர்கள் தவறு செய்வதால் அதனை தடுக்கவே இந்த ஏற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News