Kathir News
Begin typing your search above and press return to search.

குட்கா விவகாரத்தில் தி.மு.க ஆட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்ட மா.சுப்ரமணியன்!

குட்கா விவகாரத்தில் தி.மு.க ஆட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்ட மா.சுப்ரமணியன்!

Mohan RajBy : Mohan Raj

  |  23 July 2021 12:31 AM GMT

"கடந்த 2 மாதங்களில் குட்கா விற்பனையைத் தடுப்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை தான்" என மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ''கொரோனா 2ம் அலையால் நாடு முழுவதும் ஏற்பட்ட நிலைமை குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்பது 100% உண்மை.

கடந்த 2 மாதங்களில் குட்கா விற்பனையைத் தடுப்பதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை தான். கொரோனா தடுப்புப் பணியில் தான் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குட்கா இல்லை என்ற நிலையை ஓரிரு மாதங்களில் உருவாக்கியே தீர வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News