"உங்க வீட்டு புள்ளையா நினைச்சு விட்டுடுங்க" - வருத்தம் தெரிவித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா!

இந்துக்களை பற்றியும், பாரத பிரதமர் மோடியை பற்றியும் கடுமையாக விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
பனவிளை சர்ச் பங்குதந்தையும், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகருமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டத்தில் பங்கேற்று பேசியபோது இந்துக்களையும், பாரத பிரதமர் மோடியையும், பாரத மாதாவையும் இழிவாக பேசினார். கூடுதல் இலவச இணைப்பாக "தமிழகத்தில் தி.மு.க வெற்றிபெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை" என்றும் போட்டு உடைத்தார்.
இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பு, பா.ஜ.க சார்பில் பாதிரியார் மீது புகார் அளிக்கப்பட்டது. எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் "நான் வருத்தம் தெரிவிக்கிறேன்" என பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்து சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு நான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது, இதனால் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்" என மன்னிப்பு கேட்காமல் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.